அமெரிக்காவில் வாஜ்பாய் அறையில் நுழைந்த ரகசிய மனிதன்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பிரதமர் வாஜ்பாய் தங்கியிருந்த வெள்ளை மாளிகை அறையில் அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவன் பதுங்கியிருந்ததைப் அமெரிக்கஉளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் உளவு நிறுவன செய்தித் தொடர்பாளர் மார்க் கனாலே கூறுகையில், பிரதமர் வாஜ்பாய் 13 நாட்கள் சுற்றுப்பயணமாகஅமெரிக்கா வந்திருந்தார். அவர் ஐக்கிய நாடுகள் சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வாஷிங்டன் வந்தார்.
அங்கு அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் வரவேற்பு அளித்து வெள்ளை மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். வெள்ளை மாளிகையில் பிரதமர் வாஜ்பாய்தங்கியிருந்த அறையில் அமெரிக்க உளவு நிறுவனத்தார் பரிசோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகப்படும் விதத்தில் அங்கு வாலிபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரைக் கைது செய்தனர். அவர் பெயர்திபல் பாண்டியா (27) என்றும், நியு ஜெர்சியைச் சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் சட்டவிரோதமாக, வெள்ளை மாளிகையில் வாஜ்பாய் தங்கியிருந்த அறையில் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி நுழைந்தார்என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவர் வாஜ்பாயின் அறையில் நுழைந்தபோது வாஜ்பாய் அங்கு இல்லை. அவர் செப்டம்பர் 16 ம் தேதி அங்குநுழைந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
மார்க், இதுகுறித்து பிறவிவரங்கள் எதையும் கூற மறுத்து விட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications