2 முதல்வர்களுக்கு மூப்பனார் விருந்து
சென்னை:
மகாராஷ்ட்ரா மற்றும் புதுவை முதல்வர்களுக்கு சென்னையில் மூப்பனார் புதன்கிழமை மதிய விருந்து அளித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விழாவில் கலந்து கொள்ள மகாராஷ்ட்ரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க், பாண்டிச்சேரி முதல்வர்சண்முகம், மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் முரளி தேவரா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெனார்த்தன ரெட்டி ஆகியோர் சென்னைவந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை த.மா.கா நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, பூவராகவன் ஆகியோர் வரவேற்றனர். லஸ்அவென்யூவில் உள்ள இல்லத்தில் த.மா.கா தலைவர் மூப்பனாருடன் அவர்கள் பேச்சு நடத்தினர்.
பின்னர் கன்னிமரா நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு, மூப்பனார் மதிய விருந்தளித்தார். இந்த விருந்தில் த.மா.கா மாநிலநிர்வாகிகள், கட்சி முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் த.மா.கா செய்தித் தொடர்பாளர் கோபண்ணா எழுதியுள்ள "மக்கள் தலைவர் மூப்பனார் என்ற நூல் வெளியீட்டுவிழாவில் இந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.