For Daily Alerts
Just In
என்ன சாதித்தது இந்தியா?
சிட்னியில் 20-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 25 விளையாட்டுக்களில் 4-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- குத்துச்சண்டை:81 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் குர்சரண் சிங் 11-9 என்ற புள்ளிகள் கணக்கில்தென் கொரிய வீரரைத் தோற்கடித்து அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.
- டென்னிஸ்:ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் லியாண்டர் பயஸ் தோல்வியுற்றார். ஸ்வீடன் வீரர்டில்ஸ்ட்ராமிடம் அவர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.
இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி 6-3, 6-4 என்ற செட்கணக்கில் ருமேனிய ஜோடியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- துப்பாக்கிச் சுடும் போட்டி:பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 பொசிஷன்) போட்டியில் அஞ்சலி வேத்பதக் 600-க்கும் 566 புள்ளிகள் எடுத்து 33-வது இடம் பெற்றார்.
- குதிரையேற்றம்:ஆண்களுக்கான தனிநபர் டிரஸ்ஸேஜ் பிரிவில் இம்தியாஸ் அனீஸ் 61 பெனால்டிபுள்ளிகளுடன் 32-வது இடத்தில் உள்ளார். இப்போட்டி 3 நாட்களுக்கு நடைபெறும்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Wednesday, September 20, 2000, 5:30 [IST]