புலிகளின் கண்ணிவெடிக்கு 29 ராணுவ வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் திரிகோணமலைப் பகுதியில் விடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 29 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

இலங்கையில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணம் பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே புலிகளிடமிருந்த சாவகச்சேரியை ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். இதையடுத்து திங்கள்கிழமை ராணுவ வீரர்கள்அப்பகுதியில் சிறிய அளவில் தாக்குதல் நடத்தினர்.

அப்பகுதியில் தொடர்ந்து புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 75 புலிகளும், 18 ராணுவ வீரர்களும்இறந்தனர்.

இந்த நிலையில் திரிகோணமலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை புலிகள் கண்ணி வெடி வைத்துத் தகர்த்தனர். இதில் காயமடைந்த சிலர்வாகனத்திலிருந்து ஓடியபோது புலிகள் அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் 29 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தலைநகர் கொழும்பு உள்பட இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+