மதுரையில் வன்முறை தொடர்கிறது
சென்னை:
மதுரையில் வன்றை தாண்டவமாடுகிறது.
திமுகவினர் யாரும் முதல்வர் கருணாநதியின் மகன் மு.க. அழகிரியுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றுதிமுக தலைமை அறிவித்துள்ளதை அடுத்து மதுரையில் வன்முறை வெடித்தது.
செவ்வாய்க்கிழமை இரவில் துவங்கிய இந்த வன்முறைச் சம்பவங்கள் புதன்கிழமையும் நீடித்தன. அழகிரிக்கு எதிராகஇப்படியொரு அறிவிப்பு வெளியான செவ்வாய்க்கிழமை இரவே இரண்டு அரசு பஸ்கள் தீக்கு இரையாகின.
ரயில்கள் மீது கல் வீசப்பட்டது. புதன்கிழமை காலை வில்லாபுரம் தொலைபேசி இணைப்பகம் அருகே ஒரு பஸ்சைவன்முறையாளர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.
பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை கொளுத்தியதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர்வருவதற்குள் பஸ் எலும்புக் கூடாகிவிட்டது.
மதுரை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அழகிரிக்கு ஆதரவாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால், போலீஸ்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோதிகள் 163 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஸ்கள் மீது கல் வீசி தாக்கியதாக 28 பேரை பிடித்துள்ளனர். பஸ் எரித்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications