வரலாறு படைத்த மல்லேஸ்வரிக்கு ரூ.10 லட்சம் பரிசு
ஹைதராபாத்:
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த கர்னம்மல்லேஸ்வரிக்கு ஆந்திர அரசு ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் மல்லேஸ்வரி மொத்தம் 240 கிலோ எடைதூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்தமுதல் பதக்கம் இது.
அது தவிர, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு தனி நபர் பிரிவில் பதக்கம் பெற்றுத்தந்த மூன்றாவது நபர் மல்லேஸ்வரி.
இதனுடன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றதுஇதுவே முதல்முறை என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த மல்லேஸ்வரியின் இச் சாதனையைப் பாராட்டிய ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பாராட்டு:
பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பாராட்டுதெரிவித்துள்ளார்.
மல்லேஸ்வரியின் இந்த ஈடு இணையற்ற சாதனைக்கு எனது மனப்பூர்வமானவாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications