For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பளுதூக்குதல்: கொலம்பிய வீராங்கனை, பல்கேரிய வீரருக்குத் தங்கம்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

பளுதூக்கும் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 75 கிலோஎடைப் பிரிவில் கொலம்பிய வீராங்கனை மரியா இசபெல் உருட்டியா மொத்தம் 245 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.

சிட்னி ஒலிம்பிக்கில் கொலம்பியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இது. இப்போட்டியில் நைஜீரியாவின் ருத் ஓக்பீஃபோ வெள்ளியும், சைனீஸ் தைபே நாட்டின்குவோ யி-ஹாங் வெண்கலமும் வென்றனர்.

3 வீராங்கனைகளும் மொத்தமாக தலா 245 கிலோ எடையைத் தூக்கினர். ஆனால்,உடல் எடையை வைத்து கொலம்பிய வீராங்கனைக்குத் தங்கமும், நைஜீரியவீராங்கனைக்கு வெள்ளியும் கிடைத்தன.

ஆண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் பல்கேரியாவுக்கு தங்கம், வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்தன. பெலாரஸ் நாட்டுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பல்கேரிய வீரர் போவ்ஸ்கி மொத்தம் 357.5 கிலோ எடை தூக்கி புதிய ஒலிம்பிக்சாதனை படைத்தார். அது தவிர கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 195 கிலோ எடை தூக்கிஉலக சாதனை படைத்தார்.

இரண்டாம் இடம் பிடித்த பல்கேரிய வீரர் ஜியார்ஜி மார்கோவ் ஸ்நாட்ச் பிரிவில் 165கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனை படைத்தார். அவர் மொத்தம் 352.5 கிலோஎடை தூக்கினார்.

செர்கி லாவரென்கோவ் மொத்தம் 340 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம்பெற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X