ராஜ்குமார் மனைவி உடல்நிலை பாதிப்பு
பெங்களூர்:
கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவுக்கு புதன்கிழமை ரத்தக் கொதிப்பு அதிகரித்ததையடுதது அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராஜ்குமார் கடத்தபட்டு 52 நாட்கள் ஆகிவிட்டன. அவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வீரப்பனின்கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பெரும் சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் கணவர் கடத்தப்பட்டதால் மிகவும் வருத்தத்தில் இருந்து வரும் பர்வதம்மாவுக்கு உடல நிலை பதிக்கப்பட்டது.இதையடுத்து அவர் மல்லைய்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்து வந்தது. அதுபுதன்கிழமை அதிகரித்தது.
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் அவர் உடல் நலத்துடன் உள்ளார் என்று ராஜ்குமாரின் மகன்கள் தெரிவித்தனர்.
பர்வதம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவரம் தெரிந்தவுடன் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, காவல்துறைடி.ஜி.பி. ஆகியோர் மருத்துவனைக்கு விரைந்தனர்.












Click it and Unblock the Notifications