லண்டனில் வெளிநாட்டு உளவுப் பிரிவு அலுவலகம் மீது ராக்கெட் தாக்குதல்
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எம்16 என்ற வெளிநாட்டு உளவுப் பிரிவுதலைமை அலுவலகம் மீது புதன்கிழமை இரவு சிறிய ராக்கெட் தாக்குதல்நடத்தப்பட்டது.
லண்டனில் மத்திய பகுதியில் தேம்ஸ் நதிக் கரை மீது இந்த அலுவலகம்அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் 8-வது தளத்தில் ராக்கெட் விழுந்து வெடித்தது.இதில் அலுவலகத்துக்குச் சேதமேற்பட்டதாகவும் யாரும் காயமடையவில்லை என்றும்அலுவலத் தலைவர் ஆலன் பிரை தெரிவித்தார்.
இத் தாக்குதல் சிறியதுதான். ஆகவே, வழக்கம் போல் பணிகள் தொடர்ந்துநடைபெறும். இத் தாக்குதலுக்கும் வட அயர்லாந்து குடியரசு ஆதரவு பிரிவினைவாதஅமைப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
அனைத்து வகையிலும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும்அவர் தெரிவித்தார்.
உளவுத் துறை அலுவலக்கத்தில் இரு பெரிய சப்தங்கள் கேட்டன. சிறிது நேரத்தில்அலுவலகத்திலிருந்து புகை வந்தது. அலுவலகத்தின் கண்ணாடி கதவுகள் நொறுங்கினஎன்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த உளவுப் பிரிவு அலுவலகத்தில்தான் பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த"தி வேர்ல்ட் ஈஸ் நாட் எனஃப்" என்ற ஆங்கிலப் படம் எடுக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.