ஆட்சியைப் பிடிக்க கடுமையாக உழைக்கிறோம் ..ராமதாஸ்
கள்ளக்குறிச்சி (விழுப்புரம்):
தமிழகத்தில் 2006-ம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைத்து வருகிறது என்று டாக்டர் ராமதாஸ்கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பேபி திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ்பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எங்கள் கட்சி 2006 ல் தமிழகத்தில் ஆட்சியைப்பிடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். கட்சியை மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வருகிறோம்.
பாட்டாளி மக்கள் கட்சி மாநாடுகள் நடக்கும் இடங்களிலெல்லாம் அதற்கு மக்களின் ஆதரவு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.கட்சிகள் மாறி,மாறி 33 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகின்றன.
என் பின்னால் நீங்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர். உங்கள் பிள்ளைகள் வயிரார சாப்பிடவும், விவசாயிகள் வசதியோடு இருக்கவும் பாட்டாளிமக்கள் கட்சி உதவி செய்யும்.
பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரும், ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்றார் ராமதாஸ்.