தெற்காசிய மொழி பெயர்ப்புப் போட்டியில் இந்தியர்கள்ஆதிக்கம்
டெல்லி:
டெல்லியில் நடந்த முதலாவது தெற்காசிய மொழிபெயர்ப்புப் போட்டியில் இந்திய எழுத்தாளர்கள் பல பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.
முதலாவது கதா தெற்காசிய மொழி பெயர்ப்புப் போட்டி டெல்லியில் நடந்தது. கதா அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது. இதில் மொத்தம் உள்ள 20விருதுகளில் 18 விருதுகளை இந்தியர்கள் வென்று சாதனை படைத்தனர். மீதமிருந்த இரு விருதுகளை இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், நேபாளஎழுத்தாளரும் வென்றனர்.
டெல்லி பிரிட்டிஷ் கவுன்சிலில் வியாழக்கிழமை நடந்த விழாவில் பிரபல எழுத்தாளர் பீஷம் சஹ்னி விருதுகளை வழங்கினார். விருது ரூ. 2000 பரிசு மற்றும்பாராட்டுப் பத்திரத்தை உள்ளடக்கியது.
விருது பெற மொத்தம் 1580 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 1511 எழுத்தாளர்களும் அடஙகுவர். பாகிஸ்தானிலிருந்து 2,இலங்கையிலிருந்து 6 பேர், வங்கதேசத்திலிருந்து 31 பேர், நேபாளத்திலிருந்து 20 பேர், பூட்டானிலிருந்து ஒருவரும் விண்ணப்பித்திருந்தனர்.
தெற்காசியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான சசி தேஷ்பான்டே, சல்மான் சாஹித், கண்டோகர் அஷ்ரப் ஹுசைன் ஆகியோர் விருது பெறத் தகுதியானமொழிபெயர்ப்புகளை தேர்வு செய்தனர். ஆங்கிலம் தவிர, தமிழ், பஞ்சாபி, உருது, சிந்தி, பங்களா ஆகிய மொழிகளில் வெளியான மொழி பெயர்ப்பு நூல்களுக்கும்பரிசு வழங்கப்பட்டது.
தமிழில், ராமையா குமார் (இந்தியா), உமா பாலு (இலங்கை) ஆகிய இரு எழுத்தாளர்கள் விருது வென்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications