திருட்டு முயற்சி தோல்வி: பட்டதாரி வாலிபர் தற்கொலை
சென்னை:
சென்னையில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் அங்கிருந்த பெண் கூச்சல் போட்டுக் கத்தியதால் மாடியிலிருந்து கீழே குதித்துதற்கொலை செய்து கொண்டார்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரா. இவரது மனைவி பபிதா. வயது 33.
இவர் சம்பவத்தன்று தன் வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது நாகரீகமாக உடையணிந்த வாலிபர் ஒருவர் காலிங்பெல் அடித்து இவர்வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் தன்னை எல்.ஐ.சி.ஏஜன்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். பபிதாவின் கணவரும் எல்.ஐ.சி.ஏஜன்ட் என்பதால், பபிதா அவரை வீட்டிற்குள்அழைத்து வந்து உட்கார வைத்தார்.
திடீரென்று அந்த வாலிபர், பபிதாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வீட்டிலிருந்த பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றார். அதற்குள் பபிதாகூச்சல்போட்டுக் கத்தவே அங்கிருந்த வாட்ச்மேன் வந்து விட்டார்.
பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் தன்னைப் பிடிக்க வந்து விடுவார்களோ என்று கருதிய அந்த வாலிபர் பபிதா வீட்டு மாடியிலிருந்து குதித்து இறந்தார்.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் பிகாம் பட்டதாரி என்று மட்டும் தெரிய வந்தது. அவர் பெயர், இதர விவரங்கள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications