கர்நாடகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூர்:
சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட நான்குபேரையும் விடுதலை செய்யவது குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் கிருஷ்ணாதலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சனிக்கிழமையன்று நடை பெற இருக்கிறது.
சந்தனக்கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ்குமார் உட்பட நான்கு பேரை ஜுலை மாதம் 30-ம்தேதி கடத்திச் சென்றான். ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தூதர் கோபால் நான்காவது முறையாக கோபால் காட்டுக்குசென்றுள்ளார்.
இந்த நிலையில் ராஜ்குமார் உட்பட கடத்தப்பட்ட நான்கு பேரையும் விடுவிப்பதுகுறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்சனிக்கிழமையன்று பெங்களூரில் நடைபெற இருக்கிறது.
இதில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் எனஎதிர்பபார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு விதானசவுதா கூட்ட அரங்கில் தொடங்கி நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications