மழைக்கு வீடு இடிந்து 4 பேர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெய்த பலத்த மழையில் சுவர் இடிந்து விழுந்து நான்கு பேர் பலியானார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் சனிக்கிழமை கன மழை பெய்தது. பேராவூரணியை அடுத்த திருப்பூரணி கிராமத்தில் வசிப்பவர் சாகுல் அமீது (50). சைக்கிள் கடைவைத்துள்ளார்.
இவருக்கு மைம்பொன் பீவி (35) என்ற மனைவியும், ராவுத்தரப்பா (7), முகமதுகனி (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். திருப்பூரணி கிராமத்தில்பெய்த பலத்த மழையில் சாகுல் அமீது கூரை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில், தூங்கிக் கொண்டிருந்த இந்த நால்வரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர்.
இரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி சனக்கிழமை காலையில் தான் கிராமத்தினருக்கு தெரிந்தது. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய பிணங்களைகாலையில் தான் அகற்றினர்.
மழைக்கு சைக்கிள் கடைக்காரர் குடும்பமே பலியாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications