வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்அணையின் நீர் மட்டம் 94 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால்,உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அணைக்கு விநாடிக்கு 45 ஆயிரத்து 419 கன அடி தண்ணீர் வருகிறது. கடந்த நான்குநாட்களாக இதே அளவு தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம்வேகமாக உயர்ந்து வருகிறது.
ஞாயிற்றுக் கிழமை காலை 83.95 அடியாக இருந்த நீர் மட்டம் திங்கள் கிழமை காலை94.28 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3561 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி.
தண்ணீர்வரத்து இதேபோல் நீடித்தால் விரைவில் அணை நிரம்பி விடும் என்றுபொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications