இலங்கையில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு
கொழும்பு:
கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற இருந்தபெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன் ஸ்ரீலங்காஏர்லைன்சுக்குச் சொந்தமான ஏ-330 ரக ஏர்பஸ் விமானம் தரையிரங்க முயன்றது.
அந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த பைலட்டும், இந்தியாவைச் சேர்ந்த இரண்டுபயிற்சி பைலட்டுகளும் இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் விடுதலைப்புலிகளின் பதுங்கி குழிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வந்த மூன்று போர் விமானங்களும்நின்று கொண்டிருந்தன.
இந்த போர் விமானங்களை வேறு இடத்தில் நிறுத்தும் வரை வானில் சுற்றி வருமாறுவிமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏர்பஸ் பைலட்டிடம் தெரிவித்தனர். ஆனால்பைலட் அவசரமாக விமானத்தை தரையிக்கி விட்டார். அதிர்ஷ்டவசமாக அதற்குள் போர்விமானங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால், நடக்கவிருந்த மிகப் பெரியவிமான விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications