தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு
சென்னை:
சென்னையில் செவ்வாய் கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்நடைபெற்றது.
நலத்திட்டங்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகசென்னை கோட்டையில் செவ்வாய் காலை அமைச்சரவைக் கூட்டம நடைபெற்றது. பகல் ஒரு மணி வரைநடந்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
நடப்பு குறுவை பருவத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் நேரடிக் கொள்முதல் நிலையங்களிலும், இதரப்பகுதிகளில் வட்டக்கிடங்குகளிலும் நெல் கொள்முதல் செய்யும்போது தற்போது தமிழ்நாடு வாணிபக்கழகத்தால் கிரேடு "ஏ ரகத்தில் தரம் -3 நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஆகவும்,சாதாரண ரகத்தில் தரம்-3 நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.19 ஆகவும் தரவெட்டு செய்திருப்பதற்குபதிலாக சாதாரண ரகம் மற்றும் கிரேடு "ஏ ரகம் ஆகிய இரண்டிலும் தரம் -3 நெல்லுக்குகுவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆக தரமுடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தரம் -2 நெல்லுக்கு ஏற்கனவே முடிவு எடுத்தபடி குவிண்டால் ஒன்றுக்கு தரவெட்டு ரூ.5ஆக தொடர்ந்து இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.