பங்காரப்பா ஆட்சியில் தமிழர்கள் பட்ட பாடு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பங்காரப்பா.... நினைவிருக்கிறதா. யார் மறந்தாலும் இவரை கர்நாடகத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். இவரதுஆட்சியில் தான் கர்நாடக்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.

காவிரிப் பிரச்சனையைக் காரணமாகக் காட்டி கர்நாடகத்தில்1991ம் ஆண்டு வன்முறை ஆரம்பித்தது. அப்போதுகர்நாடகத்தில் முதல்வராக இருந்த பங்காரப்பாவுக்கு தனது காங்கிரஸ் கட்சியிலேயே ஏகப்பட்ட பிரச்சனை.

பதவியை தக்க வைக்க வேண்டிய நிலையில் இருந்த அவருக்கு அல்வா கிடைத்தது மாதிரி கிடைத்தது காவிரிபிரச்சனை. ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறினார். விளைவு, கர்நாடகம் முழுவதும் தமிழர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அரசு நிர்வாகம் அலட்சியமாய் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது.

இதனால், பங்காரப்பாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே நல்ல அரசியல் அறுவடை கிடைத்தது.

அதிலிருந்து பங்காரப்பா என்றால் தமிழர்களுக்கு நரம்புகளில் மின்சாரம் பாய்வது வழக்கம். இப்போது அரசியலில்காணாமல் போய்விட்டவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் பங்காரப்பா. மீண்டும் ஒரு அரசியல் வாழ்க்கைதேவைப்படுவதால் சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருந்தார்.

ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கூட இவரை முதல்வர் கிருஷ்ணா அரசியல்ரீதியில் ஓரம் கட்டியேவைத்திருக்கிறார். இதனால், கிருஷ்ணாவுக்கு எந்த வகையிலாவது தொல்லை தர வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளபங்காரப்பாவுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிருஷ்ணாவின் அரசு இந்த பந்தை நடத்த வேண்டாம் என கோரி வந்தாலும் அவரது கட்சியிலேயே இருந்துகொண்டு கர்நாடக பந்துக்கு ஆதரவு என்று கிளம்பியுள்ளார் பங்காரப்பா.

இதனால், இந்தப் பிரச்சனையை தமிழர்களுக்கு எதிராக பங்காரப்பா திருப்புவாரோ என்ற அச்சம்தமிழர்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+