போலீசை மிரட்டிய தீவிரவாதிகள் மீது வழக்கு
கோவை:
நீதிமன்றத்திற்குள் சாட்சி சொல்ல வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததீவிரவாதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி நடந்த சோதனையின்போது, 5 தீவிரவாதிகளை உக்கடம் சப்இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரசேகர், ஒரு வீட்டிற்குள் சுட்டார். பின்னர் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுபெரம்பலூர் மாவட்டத்திற்குச் சென்று விட்டார். அங்கு தற்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றிவருகிறார்.
இந்நலையில் கோவை நடுவர் நீதிமன்றத்திற்கு சந்திரசேகர், வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிக்க வந்தார்.அப்போது, அங்கு வேறு வழக்கிற்கு ஆஜராக வந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய கைதிகள் அழைத்துவரப்பட்டனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரசேகரைப் பார்த்து, அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலையடுத்து,கைதிகளாக உள்ள கீழக்கரை அப்பாஸ், அன்சாரி ஆகியோர் மீது ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குத்தொடர்ந்தனர்.