For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை விபத்தில் 8 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பண்ருட்டி அருகே செவ்வாய் கிழமை காலை நடந்த கோர விபத்தில் திராவிடர் கழகத் தொண்டர்கள் உள்பட 8பேர் பலியானார்கள்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து சென்னைக்கு திங்கள் கிழமை இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டுவந்து கொண்டிருந்தது. பஸ்சில் 47 பேர் பயணம் செய்தனர்.

செவ்வாய் கிழமை அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை பஸ் நெருங்கிக் கொண்டிருந்தது.

அதிகாலைவேளை என்பதால் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். மழையும் பெய்து கொண்டிருந்தது. பஸ்அப்போது கடும்பாலியூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் 8 பயணிகள் பலியானார்கள். இவர்களில்கைலாசம், ராஜம்மாள், ரங்கசாமி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 5 பேர் தி.க.வைச் சேர்ந்தவர்கள்.

டெல்லியில் 30ம் தேதி நடைபெறும் தி.க.மாநாடு மற்றும் பெரியார் மைய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகசென்னை வந்தனர். சென்னையில் இருந்து செல்லும் சிறப்பு ரயிலில் டெல்லி செல்லவிருந்தனர்.

விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X