பலத்த மழை: டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதில் தாமதம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னியில் பலத்த மழை பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமை டென்னிஸ் போட்டிகள்தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள், ஆண்கள் இரட்டையர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம், பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம்,பெண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன.
ஆனால், காலையிலிருந்தே பலத்த மழை பெய்துவருவதால் ஆட்டங்கள் தொடங்குவதில்தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரர், ஜெர்மனியின் டாம்மி ஹாஸ் இருவருக்கும் இடையேயானமுதல் அரையிறுதி ஆட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது. ஆனால்,ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது.
இதையடுத்து அந்த ஆட்டம் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து பலத்த மழைபெய்துவருவதால் மற்ற ஆட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications