For Daily Alerts
Just In
திருப்பதி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது
கடலூர்:
திருச்சி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது தடம்புரண்டது.
இச்சம்பவத்தில் ரயில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இதுகுறித்து தென்னக ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இவ்விபத்தில்உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரயிலில் பயணம் செய்த நோயாளி ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து புதன்கிழமை காலை வரைஅப்பகுதியில் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்பகுதி வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, September 27, 2000, 5:30 [IST]