தொடர்கிறது கருணாநிதி கொடும்பாவி எரிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடகத்தில் ராஜ்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்துவோர் தமிழகமுதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை தொடர்ந்து எரித்து வருகின்றனர்.

சந்தன கடத்தல் வீரப்பனால் கஜனூரிலிருந்து பிரபல கன்னட நடிகர் ஜூலை மாதம் 30-ம் தேதிகடத்தப்பட்டார். ராஜ்குமார் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என கூறி கர்நாடகத்தின் பல பகுதிகளில்போராட்டங்கள் நடந்து வருகின்றன. அப்போதெல்லாம் தவறாமல் தமிழக முதல்வர் கருணாநிதியின்கொடும்பாவியும் எரிக்கப்படுகிறது.

கன்னட சளுவாலி என்ற அமைப்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறது. கன்னட சளுவாலிசமிதியினர் செவ்வாய்க்கிழமையன்று மைசூர் பாங்க் சர்கிள் அருகே போராட்டம் நடத்தினர். இந்தபோராட்டத்தில் வட்டாள் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணகுமார் ஆகியோர்பங்கேற்றனர்.

ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும், கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. கட்டி இழுத்து வரப்பட்ட கருணாநிதியின் கொடும்பாவியும்அப்போது எரிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+