For Daily Alerts
Just In
குத்துச்சண்டை: தோற்றார் குர்சரண் - மற்றொரு பதக்கக் கனவு தகர்ந்தது
சிட்னி:
குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதியில் இந்தியாவின் குர்சரண் சிங் தோற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் மற்றொரு பதக்கக் கனவும் பறிபோனது. புதன்கிழமைநடந்த கால் இறுதியில் உக்ரைன் நாட்டின் ஆன்ட்ரி ஃபெட்செளக்கிடம் புள்ளிகள்கணக்கில் குர்சரண் சிங் தோற்றார்.
இப் போட்டியில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவுக்குக் குறைந்தது ஒருவெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாக இருந்தது. ஆனால், அந்த எண்ணம்ஈடேறவில்லை.
இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோன நிலையில், ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன்இந்தியா சிட்னியிலிருந்து திரும்புகிறது.
யு.என்.ஐ.
Story first published: Wednesday, September 27, 2000, 5:30 [IST]