தசரா நேரத்தில் பந்த் வேண்டாம்: ராஜ்குமார் பேசிய கேஸட் சென்னை வந்தது
சென்னை:
தசரா நேரத்தில் பந்த் நடத்த வேண்டாம் என்று காட்டிலிருந்து நடிகர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து பேசிய கேசட் சென்னைக்கு புதன்கிழமை வந்துள்ளது.
ராஜ்குமார் எப்போது வருவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நக்கீரன் நிருபர் சுப்பு மூலம் புதன்கிழமை காலைசென்னை வந்து சேர்ந்துள்ளது ஒரு கேசட்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் அரசுத்தூதர் கோபால், தனது நிருபர்களுடன் வீரப்பனைச் சந்தித்தார். பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே, தயாராகவைத்திருந்த கேஸட்டைக் கொடுத்தாராம் வீரப்பன். அந்தக் கேஸட்டில் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமேபேசியுள்ளார்.
அது குறித்த விவரமாவது:
தசரா திருவிழா நடந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் பந்த் நடத்துவது பொதுமக்களுக்கு ஆபத்தானது. பந்த் நடத்தாதீர்கள். அந்த சாமூண்டிஸ்வரி அருளால்நான் விரைவில் காட்டிலிருந்து வருவேன்.
மக்களுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பந்த் போன்ற எந்த நடவடிக்கையும் இப்போது தேவையில்லை. தயவுசெய்து பந்த்தைக் கைவிடுங்கள்.நான் இங்கே நன்றாக இருக்கிறேன். பர்வதம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார் ராஜ்குமார்.
தற்போது இந்தக் கேஸட் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டிலிருந்து ராஜ்குமார் எப்போது வருவார் என்று ஆவலோடுகாத்திருக்கிறது தமிழக அரசு.