For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை - பெங்களூர் ரயிலை கவிழ்க்க சதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையிலிருந்து பெங்களூர் வந்து கொண்டிருந்த ரயிலைக் கவிழ்க்க செய்திருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூர் வரும் ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கும், பாச்சூர் ரயில் நிலையத்துக்கும் இடையிலுள்ள ரயில் தண்டவாளத்தில் உள்ள இரும்புக் கம்பிகள்அகற்றப்பட்டிருந்தன.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு தண்டவாளத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த கேங்மேன் அதைக் கண்டுபிடித்துவிட்டார். உடனடியாக அவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டபோது அங்கு அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல் ஒன்று நடமாடிக் கொண்டிருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் வருவதைக் கண்டதும் அந்த ஆசாமிகள் தலைமறைவாகி விட்டனர். ரயில்களைக் கவிழ்ப்பதற்காக அவர்கள் நாசவேலையில் ஈடுபட முயன்றதுகண்டுபிடிக்கப்பட்டது.

இதே நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு சரக்கு ரயிலும், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலும் பெங்களுருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆனால், இந்த சதிவேலை குறித்து உடனடியாக சென்னை ரயில் நிலையத்துக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூர் புறப்படவிருந்தரயில்கள் நிறுத்தப்பட்டன.

மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய்ப் படையினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது.

ஐ.ஜி.உத்தரவு:

ரயில்களைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் நாசவேலைகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூர்வரும் அனைத்து ரயில்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும்படி ரயில்வே ஐ.ஜி.திலகவதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து பெங்களூர் வரும் அனைத்து ரயில்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X