கோயபல்ஸ் பிரச்சாரத்தில் மூப்பனார்: திமுக கண்டனம்
சென்னை:
கருணாநிதி சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறி கோயபல்ஸ் பிரச்சாரத்தில் மூப்பனார் ஈடுபட்டுள்ளார் என்று திமுக கடுமையாக கண்டித்துள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்ட அறிக்கை:
ஆறு மாதம் என்ன ஆறு வருசம் சிறையில் இருக்கத் தயார் என்று தமாகா தலைவர் மூப்பனார் கூறியுள்ளார். தமாகா மறியல் செய்தால் ஆறு மாதம்சிறை தண்டனை என்று முதல்வர் எங்கே யாரிடம் தெரிவித்தார்.
25ம் தேதி தமாகா போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மறியல் செய்தால் அதற்குரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது மறியலில் ஈடுபட்ட போராட்டங்களில் ரிமாண்ட் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று மூன்றுமாதம், ஆறுமாதம் என்று தண்டனை பெற்றுள்ளோம் என்று தான் முதல்வர் தெரிவித்தார்.
தமாகாவினரை ஆறு மாதம் சிறையில் வைக்கப் போவதாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. தண்டனை வழங்குவது என்பது நீதிபதியின் பொறுப்பாகும்.ஒரு முதல்வரால் சிறை தண்டனையெல்லாம் வழங்க முடியாது. இந்த சிறிய விஷயத்தை கூட புரிந்து கொள்ளாமல் முதல்வர் மீது சேற்றை வாரி இறைக்கும்முயற்சியிலே தமாகாவினர் ஈடுபடுவது முறைதானா?
மேலும் மூப்பனார் திருப்பூரில் பேசும்போது முதல்வர் ரொம்ப பேசுகிறார். திமுகவால் தான் தமாகா வெற்றி பெற்றது என்று கருணாநிதிகூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். திமுக வால் தான் தமாகா வெற்றி பெற்றது என்பது உலகறிந்த உண்மை என்ற போதிலும், அதைக் கூடகருணாநிதி எங்கேயும் சொல்லிக் காட்டியது கிடையாது.
ஆனால், மூப்பனார், முதல்வர் சொல்லாததை எல்லாம் சொல்லிக் கொண்டு அதற்குப் பதில் கூறும் முயற்சிகளிலே ஈடுபடுகிறார். ராஜீவ் காந்திசிந்திய ரத்தத்தால் அதிமுக வெற்றி பெறவில்லை என்று உண்மையாக மதுரையிலே பேசியது ஜெயலலிதா அம்மையார் தான். அந்த ராஜீவ்மரணத்தையே மறந்து விட்டு இப்படி கருணாநிதி மீது பழி போடலாமா?
இப்படி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகக் கூறிக் கொண்டு அதற்குப் பதில் கூறுவது என்ற முறையில் சேற்றை வாரி இறைப்பதற்குப் பெயர் தான்கோயபல்ஸ் பிரச்சாரமா என்று மூப்பனாரை கேட்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications