சென்னை-பெங்களூர் ரயில்களை கவிழ்க்க சதி
சென்னை:
சென்னை-பெங்களூர் இடையே செல்லும் ரயில்களை கவிழ்க்க தொடர்ந்து சதி நடந்து வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் தான் இந்த சதித் திட்டம் குறித்து போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து ரயில்பாதையில் கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து ரயில்வே ஐ.ஜி. திலகவதி கூறுகையில், ரயிலைக் கவிழ்க்க முயலும் கும்பலைப் பிடிக்க தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படை இரவு பகலாக பெங்களூர்-சென்னை இடையிலான ரயில் பாதையைகண்காணித்து வருகிறது.
ரயில்களிலும் கூடுதலாக ரயில்வே போலீசார் அனுப்பப்படுகின்றனர். இது தவிர ரயில் நிலையங்கள், ரயில்பாலங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள், ரயில் நிலையங்களில் சந்தேகத்துக்கு உரிய வகையில் நடமாடும் நபர்கள் குறித்தும், சந்தேகத்துக்குரியவகையில் உள்ள பொருள்கள் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை-பெங்களூர் ரயிலைக் கவிழ்க்க ஒரு கும்பல்தொடர்ந்து முயற்சித்து வருகிறது.