மத்-தி-ய அமைச்-சராகிறார் நா-கர்-கோ-யில் எம்.பி. ராதா-கி-ருஷ்-ணன்
இந்திய அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கப்படுகிறது.
நாகர்கோவில் பாரதிய ஜனதா எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராகிறார்.தமிழகத்தின் சார்பில் மத்தியில் அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம்மறைந்ததையடுத்து தமிழகத்தின் சார்பில் இவர் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு மத்திய இணையமைச்சர் அந்தஸ்து தரப்படும். விவசாயத்துறைக்கு இவர்இணையமைச்சராக வாய்ப்புள்ளது.
இவர் தவிர பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், வெங்கைய்யாநாயுடு, வினய் குமார் மல்ஹோத்ரா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாவர். இதில்சுஷ்மா மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சராவார் எனத் தெரிகிறது. இப்போது இதைசட்டத்துறை அமைச்சர் ஜேட்லி தான் கவனித்து வருகிறார்.
வெங்கைய்யா நாயுடுவுக்கு ரசாயனத்துறை வழங்கப்படலாம்.
இப்போது ரசாயனத்துறை அமைச்சராக உள்ள சிவசேனாவின் சுரேஷ் பிரபுவுக்குகுமாரமங்கலம் வகித்த மின்துறை வழங்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வசதியாக மூத்த அமைச்சரான சத்யநாராயண ராவைராஜினாமா செய்யுமாறு வாஜ்பாய் கூறினார். இவருக்குப் பதில் இளம் தலைவர்ஒருவரை அமைச்சராக்க திட்டமிட்டுள்ளார் வாஜ்பாய்.
சனிக்கிழமை மாலையில் அமைச்சர்கள் பதவியேற்பு நடக்கும்.