பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தலிபான் மறுப்பு
வாஷிங்டன்:
ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தலிபான் தலைவர்கள் மறுத்துவிடடனர்.
தலிபான் இயக்கதைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழு அமெரிக்கத் தலைநகர்வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
வெளிப்படையாகவும், நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்தப் பேச்சுவார்த்தையில், வெளியுறவுத் துறையின் மூன்றாவது நிலை அதிகாரியானதாமஸ் பிக்கரிங், தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் கார்ல் இங்கர்பர்த்ஆகியோர் கலந்து கொண்டனர் என்று அமெரிக்க வெளியுறவுத் துறைசெய்தித்தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் தெரிவித்தார்.
பெளச்சர் கூறியதாவது:
அமெரிக்கத் தரப்பில், போதைப் பொருள் போக்ககுவரத்தை தடுக்க வேண்டும், மனிதஉரிமை மீறல்களை நிறுத்த வேண்டும், பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் ஆகிய நான்குகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இரு தரப்பினரும் தங்களது தரப்பை விளக்கினர். ஐ.நா. சபையில் அங்கீகாரம் மற்றும்அமெரிக்காவுடன் தூதரக உறவு குறித்து தலிபான் அமைப்பினர் பேசவில்லை.
கடந்த காலத்திலும் தலிபான் அமைப்புடன் அமெரிக்கா பேசியுள்ளது. இனிமேலும்நாங்கள் பேசுவோம் என்றார் பெளச்சர்.
ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு அமெரிக்க தூதரகங்களில் 1998-ம் ஆண்டு நடந்தகுண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு தலிபான்தான் காரணம் என்று அமெரிக்காகூறியுள்ளது. இதுதொடர்பாக தலிபான் அமைப்பின் தலைவரான பின் லேடனைவிசாரணைக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தொடர்பான தீவிரவாதத்தை எதிர்ப்பது தொடர்பாகரஷிய அதிகாரிகளுடன் பேச, தாமஸ் பிக்கரிங் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில்ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications