For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராவுக்கு கிடைத்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. பா.ஜ.க.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜார்க்கன்ட் முக்தி மோட்சா எம்.பி.க்களுக்கு பலகோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்குக் கிடைத்ததீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று பாரதிய ஜனதா கட்சி வர்ணித்துள்ளது.

1991-ம் ஆண்டு முதல் 1996 வரை இந்தியப் பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். 1993 ம் ஆண்டு ஜூலை மாதம் 28 ம் தேதி நரசிம்மாராவுக்குஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நரசிம்மாராவ் சார்பில் ஜார்கன்ட் முக்தி மோட்சா எம்.பிக்களுக்கு லஞ்சம்கொடுக்கப்பட்டது என்று வழக்குத் தொடரப்பட்டது. டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி பாரியோக் இவ்வழக்கு சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டிருப்பதால் நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங்குற்றவாளிகள் என்று தீர்ப்புக் கூறினார்.

இந்தத் தீர்ப்பு குறித்து பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுச்செயலாளர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், முன்னாள் பிரதமர் ஒருவர் லஞ்ச வழக்கில்குற்றம்சாட்டப்பட்டு தண்டனைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. பணம் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இதுநல்ல பாடம் என்றார்.

பாரதிய ஜனதாக் கட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஜார்க்கன்ட் எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்நரசிம்மராவ் குற்றவாளிதானா என்பது குறித்து முழுத் தீர்ப்பும் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நேரடியாகலஞ்சம் கொடுத்தாரா அல்லது பிறர் மூலம் லஞ்சம் கொடுத்தாரா என்பது குறித்து முழு தீர்ப்பு வந்தபின்தான் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மிகச் சிறந்த நிர்வாகத் திறமை வாய்ந்தவர். அவர்எனது நல்ல நண்பரும் கூட என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X