சந்திரிகா வன்முறையைத் தூண்டுவதாக கூறுகிறது தமிழ் கட்சி
கொழும்பு:
இலங்கையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிப்பதற்காக, அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆயுதங்கள் கொடுத்து வன்முறையைத் தூண்டி ஆதாயம் காண,அதிபர் சந்திரிகா தலைமையிலான கட்சிகளின் ஆளுங்கட்சிக் கூட்டணி என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கொழும்பிலுள்ள பல நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஆனந்தசங்கரிகூறியிருப்பதாவது:
வடக்கு யாழ்ப்பாணத்தில் மொத்தம் 10 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் உள்ள கியாட் தொகுதியில் 1994 ம் ஆண்டு நடந்த தேர்தலில்ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணிக் கட்சி மூலம் வன்முறையைத் தூண்டி விட்டு தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றி மூலம்தான் சந்திரிகா கடந்த ஆறு வருடங்களாக கொழும்பில் ஆட்சி புரிந்து வந்தார்.
அதே போல் இந்த முறை நடக்கும் தேர்தலிலும் வன்முறையைத் தூண்டி விட்டு வெற்றி பெற சந்திரிகா அரசு முயல்கிறது. இதற்காக ஈழம் மக்கள்ஜனநாயக கூட்டணி யை வைத்து பல முகாம்களையும், தேர்தல் பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறது.
இதற்கான அனைத்து உதவிகளையும் சந்திரிகா அரசு, ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணிக் கட்சிக்கு அளித்து வருகிறது. இதனால் வடக்குயாழப்பாணத்தில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் கூட செய்ய முடியவில்லை. இந்தப் பிரச்சனையைத் தேர்தல் பார்வையாளர்கள் தலையிட்டுத்தீர்த்து வைக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அனந்தசங்கரி.
சந்திரிகாவின் நவீன பிரச்சாரம்:
நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சந்திரிகா நாடாளுமன்றத் தொகுதிகளுக்குச் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்துஏற்படும் என்பதால் அவர் தங்கியுள்ள அரசு இல்லமான டெம்பிள் டீரிஸில் தங்கிக்கொண்டே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அவர் வீட்டில் இருந்து கொண்டே ரேடியோ மற்றும் தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப உபகரணங்கள்வீட்டில் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அக்டோபர் 10 ம் தேதி நடக்கும் பொதுத்தேர்தலுக்காக அதிபர் சந்திரிகா இதுவரை பொதுக்கூட்டங்களிலோ அல்லது பேரணிகளிலோ கலந்துகொள்ளவில்லை. முக்கிய தேர்தல் பிரச்சாரங்களை பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமசிங்கே தான் மேற்கொண்டு வருகிறார்.
யு.என்.ஐ.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications