கட்டடம் இடிந்து கல்யாணப் பெண் உள்பட 42 பேர் சாவு
பெஷாவர்:
ஆப்கானிஸ்தானில் கல்யாண நிகழ்ச்சியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 42பேர் இறந்தனர்.
இறந்த அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதில் கல்யாணப் பெண்ணும்அடங்குவார்.
பெஷாவர் நகரிலிருந்து இயங்கும் ஆப்கன் இஸ்லாமிக் பிரஸ் செய்தி நிறுவனம்இதுகுறித்துத் தெரிவிக்கையில், 15 பேர் விபத்தில் காயமடைந்தனர். மாங்கி என்றஇடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த மூன்று மாடிக் கட்டடம் திடீரென இடிந்துவிழுந்தது.
உள்ளூர் வழக்கப்படி ஆண்கள் அனைவரும் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.இதனால் வீட்டுக்குள் அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாயினர்.அந்தக் கட்டடம் களிமண் மற்றும் மரத்தால் அமைக்கப்பட்டது. உள்ளே அதிக கூட்டம்இருந்ததால், சுமை தாங்காமல் கட்டடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.