பருத்தி மார்க்கெட் வளாக மேம்பாட்டுக்கு ரூ. 3.5 கோடி ஒதுக்கீடு
கோவை:
பருத்தி மார்க்கெட் வளாகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை பருத்தி மார்க்கெட் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பருத்தி மார்க்கெட் வளாகத்தில் அடிப்படை வசதிகளைப் பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென ரூ. 3.5 கோடி ரூபாய் செலவிடப்படும்.
இதில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும். விழுப்புரம் மற்றும் திருப்பூரில் உள்ள இந்தமார்க்கெட்கள் சீரமைக்கும் பணி விரைவில் துவங்கும்.
திருப்பூரில் உள்ள மார்க்கெட்டை சீரைமைக்க ரூ 1.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் ஆண்டுக்கு 24 டன் பருத்தி வர்த்தகம் நடந்து வருகிறது.
12 ஏக்கர் நிலப் பரப்புடைய இந்த மார்க்கெட்டின் அடிப்படை வசதிகள் நிதியுதவியின் மூலம் மேம்படுத்தப்படவுள்ளது. இங்கு ஓய்வறை, சாலை வசதி,வர்த்தகக் கூடம், தகவல் தொழில்நுட்பக் கூடம் ஆகியவை கட்டப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.