For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையெழுத்து இயக்கம் நடத்துகிறது த.மா.கா.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றுஜி.கே.மூப்பனார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கூட்டி, சாமானிய ஏழை எளிய மக்களின் மேல் தாள முடியாத சுமையினை ஏற்றி வைத்திருக்கும் மத்தியஅரசையும், இந்த அநியாய விலை உயர்வை நியாயப்படுத்துகின்ற மாநில அரசையும் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தமிழகத்தின் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம், பொதுமக்களது எதிர்ப்பினை மத்திய மாநில அரசுகளுக்குஎடுத்துக் காட்ட தமாக இந்த முயற்சியை மேற்கொள்கிறது.

அக்டோபர் 4ம் தேதி அல்லது 5ம் தேதி அப்பகுதி மக்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் தொகுதியின் பிரதான மக்கள் அதிகம் கூடும் இடங்களில்பொதுமக்கள் கையெழுத்து பெறப்படும். அந்த கையெழுத்துக்களுடன் கூடிய மனுக்களை தமிழக கவர்னரிடம் தமாகா ஒப்படைக்கும்.

தமாகா முன்னணியினர் அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெற வேண்டும் என்றும், இதற்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள்ஆதரவு தர வேண்டும் என்றும் மூப்பனார் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X