சென்னையைக் கலக்கிய புதிய நீதிக்கட்சி பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் முதல் மாநில மாநாட்டையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.
புதிய நீதிக் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. பேரணியைஐசரி கணேஷ் தொடங்கி வைத்தார்.
பேரணிக்கு முன்பு குதிரை வீரர்கள் கட்சி கொடியேந்தி சென்றனர். ஆட்டோ, சைக்கிள், லாரி, பஸ் ஆகிய வாகனங்களில் வந்த தொண்டர்கள் அணிவகுத்துச்சென்றனர்.
இதற்காக, எல்லோ பேஜஸ் கட்டிடத்தின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து, கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சுத்தானந்தன், ஐசரிகணேஷ்,எ.வி.எம்.செல்வம் ஆகியோர் பேரணியைப் பார்வையிட்டனர். பேரணி பிரம்மாண்டமாக நடந்த போதிலும், வன்முறைச் சம்பவங்கள் எதுவும்நடக்கவில்லை.
மாலையில் கடற்கரை சீரணி அரங்கில் மாநாடு நடந்தது.












Click it and Unblock the Notifications