For Daily Alerts
Just In
பாதிரியார் கொலை வழக்கு: 13 வயது சிறுவனுக்கு 14 ஆண்டு சிறை
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலத்தில் எரித்துக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார் கிரஹாம் ஸ்டேன்ஸ் வழக்கில் 13 வயது சுதர்சன் ஹன்ஸ்தா என்றசிறுவனுக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 14 வருட சிறைத் தண்டனை விதித்தது.
ஹன்ஸ்தாவுக்கு வயது 13 மட்டுமே ஆவதால் அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுவான் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
சனிக்கிழமை தீர்ப்பை வழங்கி நீதிபதி சுகுமார் சாஹு கூறுகையில், ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டேன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை 1999-ம்ஆண்டு ஜனவரி 22-ம் தேதி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவத்தில் ஹன்ஸ்தாவின் குற்றம்நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கில் வழக்குத் தொடரப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான தாராசிங் உள்ளிட்ட 14 பேர் மீது தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
Comments
Story first published: Monday, October 2, 2000, 5:30 [IST]