2-வது முறையாக கொலை முயற்சியிலிருந்து தப்பிய இலங்கை அமைச்சர்
கொழும்பு:
இலங்கை தகவல் துறை துணை அமைச்சர் மீது தீங்கள் கிழமையன்று இரண்டாவதுமுறையாக கொலை முயற்சி நடந்தது.
இலங்கையில் இந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.தேர்தல் வன்முறைகள் அதிக அளவில் நடந்து வருகின்றன.
இலங்கை தகவல் துறை துணை அமைச்சராகவும், இலங்கை காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவராகவும் இருப்பவர் ஹிஸ்புல்லா. மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குஎன்ற இடத்தில் திங்கள்கிழமையன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருநதார்.
அப்போது சைக்கிளில் வந்த மனித வெடி குண்டு மூலம் அவரைக்கொல்ல தாக்குதல்நடத்தப்படட்து. ஆனால் அது தோல்வி அடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகவேண்டும் என விடுதலைப் புலிகள் ஹிஸ்புல்லாவை எச்சரித்து வந்தார்கள். இந்தநிலையில் அவரைக் கொல்ல முயற்சி நடந்தது.
ஞாயிற்றுக்கிழமையன்றும் ஹிஸ்புல்லாவை கொல்ல முயற்சி நடந்தது. ஆனாலும்அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதற்கிடையே, இலங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிந்துளா திங்கள்கிழமை மாலைசிலரால் கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications