For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூரில் பட்டப்பகலில் வாலிபர் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

திருப்பூரில் திங்கள்கிழமை பட்டப் பகலில் வாலிபர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில், தியேட்டர் ஒன்றின் அருகே டெலிபோன் பூத் வைத்து நடத்தி வந்தவர் லோகநாதன் (22).

வழக்கம் போல திங்கள்கிழமை காலை தனது டெலிபோன் பூத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் அவரது கழுத்தை நெரித்துக் கொலைசெய்து விட்டு, பணம் மற்றும் டெலிபோன் உபகரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தக் கொலை பகலில் நடந்தும்கூட சில மணி நேரம் வரை யாருக்கும் தெரியவில்லை. தற்செயலாக சிலர் பார்த்து விட்டு போலீஸார் தெரிவித்தனர்.

சாதுர்யமாக நடந்த இந்தக் கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X