இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளாது .. முஷாரப்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை எனபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் நடந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான 15-வது விருது வழங்கும்விழாவில் முஷாரப் பேசியதாவது:

பாகிஸ்தான் அணுஆயுத நிலைமை மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடும் நிலையிலேயேஉள்ளது. இருப்பினும் இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் இல்லை.

அயல்நாட்டு அச்சுறுத்தலை சமாளிக்கக்கூடிய திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது.நம்நாட்டின் பாதுகாப்பையும், இறையான்மையையும் காப்பாற்றுவது மிகமுக்கியமானது.

இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் ஏற்படும் என்பது போன்ற செய்திகளைவெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது மக்களிடையேபதற்றத்தைத் தோற்றுவிக்கும்.

எங்கள் அரசு செயல்திட்டங்களை செயல்படுத்தத் தவறிவிட்டதாக கூறுகிறார்கள் இதுதவறான பிரச்சாரமாகும் என்றார் அவர்.

இதற்கிடையே, டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிராகமுஜாஹுதின் - குவாமி- இயக்கத் தலைவர்கள், கூறிய கருத்துக்கள் குறித்து அறிக்கைதருமாறு, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தை ராணுவ அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்ற பின் முஜாஹிதின் குவாமி இயக்கத் தலைவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+