அதிரடிப்படையை அனுப்ப ராஜ்குமார் மனைவி எதிர்ப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க அதிரடிப்படையை அனுப்புவதற்கு ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 65 நாட்கள் ஆகி விட்டன. இதுவரை அவர் விடுதலைசெய்யப்படுவதற்கான சூழ்நிலையே காணப்படவில்லை. இந்த நிலையில் ராஜ்குமார்விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்கள்கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்தார்.
அதற்கு முன்னதாக திங்கள்கிழமை இரவு ராஜ்குமார் மனைவி பர்வதம்மாவை அவரதுவீட்டுக்குச் சென்று கிருஷ்ணா சந்தித்தாகக் கூறப்படுகிறது. அப்போது ராஜ்குமாரைமீட்க அதிரடிப்படையை பயன்படுத்துவது குறித்து பர்வதம்மாவிடம்விவாதித்துள்ளார்.
ஆனால் அதிரடிப்படையை பயன்படுத்த பர்வதம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அக்டோபர் 11-ம் தேதி தடா கைதிகள் விடுவிப்பு தொடர்பான வழக்கில், சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கவுள்ளது. அதுவரை பொறுத்திருக்குமாறு கிருஷ்ணாவிடம்,பர்வதம்மா வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் கிருஷ்ணா 11-ம் தேதி வரை பொறுத்திருப்பதே நலம்என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.