மகளிர் காவல் நிலையங்களின் பெயர் மாற்றம்
சென்னை:
ஜெயலலிதாவால் பெயர் சூட்டப்பட்ட "அனைத்து மகளிர் காவல்நிலையம் என்பது இனிமேல் "மகளிர் காவல் நிலையம் என்றேஅழைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மாவட்டம்தோறும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை திறந்தார்.
இந்த நிலையங்களில் முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டுமேபணியில் இருப்பர். இதனால் "அனைத்து என்ற வார்த்தையையும்பெயருடன் சேர்த்தார் ஜெயலலிதா.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக கருணாநிதிவந்ததும், "அனைத்து என்ற வார்த்தை பற்றிய சர்ச்சைகிளப்பப்பட்டது. அனைத்து என்ற வார்த்தை அர்த்தமேஇல்லாமலும், சம்பந்தமே இல்லாமலும் இருக்கிறது என்றுஅரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இப்போது அந்த "அனைத்து என்ற வார்த்தையை எடுத்து விட்டு"மகளிர் காவல் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications