ரயில் நிலையத்தை கலவரப்படுத்திய விடுதலை சிறுத்தைகள்
விழுப்புரம்:
சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்ற ரயிலில் ரிசர்வேஷன் செய்யாமல் ரிசர்வ் பெட்டிகளில் ஏறிய விடுதலைசிறுத்தைகள் அமைப்பினருக்கும் ரயில்வே டிக்கெட் பரிசோதனை அதிகாரி, ரயில்வே கார்டுக்கும் இடையேபிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 150 பேர் அதிகாரிகளைத் தாக்கினர். இதனால் அங்கு பெரும் ரகளைஏற்பட்டது.
சென்னை தம்பரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டுச்சென்றது. நள்ளிரவு 12.30 மணிக்கு அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தது.
அங்கு 3 பேர் ரிசர்வ் பெட்டியில் ஏறினர். அவர்களைப் பார்த்து சந்தேகப்பட்ட டிக்கெட் பரிசோதகர் அவர்களைவிசாரிக்க ஆரம்பித்தார். மூவரும் சேர்ந்து பரிசோதகரை மிரட்ட ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்த கார்ட் ஜேம்ஸ் அங்கு விரைந்து வந்தார். மூன்று பேரையும் தனது பெட்டியில் வந்து ஏறுமாறு கார்ட்ஜேம்ஸ் கூறினார். அப்போது அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மற்ற இருவரையும் தன்னுடன் வருமாறு ஜேம்ஸ் அழைத்துக் கொண்டிருந்தபோதே, ரிசர்வ் செய்யாத பொதுப்பெட்டிகளில் இருந்த விடுதலைதச் சிறுத்தைகள் அமைப்பினர் சுமார் 150 பேர் சேர்ந்து கொண்டு அவரைத் தாக்கஆரம்பித்தனர்.
சிலர் ரயில் மீது கற்களை வீசினர். நள்ளிரவில் நல்ல தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டுஎழுந்தனர். அங்கு ஒரே களேபரம் நிலவியது.
ஒரு கும்பல் கார்ட் பெட்டிக்குள் புகுந்தது. அங்கிருந்த மின் விசிறி, பல்புகளை அடித்து உடைத்தனர். இதையடுத்துகார்ட் ஜேம்ஸ், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கழிவறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.
கலவரத்தில் ரயில் நிலையமே சூறையாடப்பட்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் செங்கல்பட்டு ரயில்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசாரும் ரயில்வே போலீசாரும் விரைந்து வந்தனர்.
ரகளையில் ஈடுபட்டவர்களை ஒடுக்கினர். பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
கடலூர் மாவட்டத்திலும் பாண்டிச்சேரியிலும் இந்த அமைப்பினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும்தொடர்ந்து மோதல் நடந்து வருவது தெரிந்ததே.