மயக்கமடைந்த போலீஸ்காரரைக் கண்டுகொள்ளாத "நீதி கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய நீதிக் கட்சி ஊர்வலத்தில் மூர்ச்சையடைந்து விழுந்த போலீஸ்காரரை காப்பாற்றஊர்வலத்தினர் யாருமே முன் வரவில்லை.

அந்த போலீஸ்காரரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஜீப்பில் ஏற்றிச் சென்று உடனடியாகமருத்துவமனையில் சேர்த்ததால் போலீஸ்காரர் உயிர் பிழைத்தார்.

புதிதாகப் பிறந்த புதிய நீதிக் கட்சியின் முதல் பேரணி சென்னையில் ஞாயிற்றுக்கிழமைநடந்தது. கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகம்முன்புள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் தி.நிகர் குற்றப்பிரிவு போலீஸ் உதவிகமிஷனர் கல்யாணசுந்தரம் ஈடுபட்டிருந்தார்.

அவரது ஜீப்பில் தலைமைக்காவலர் கருணாநிதி உள்ளிட்ட காவலர்கள் தயார்நிலையில் இருந்தனர். அப்போது கருணாநிதி திடீரென்று மயக்கமடைந்து மூர்ச்சையாகிவிட்டார். அவரை போலீசார் எழுப்ப யற்சித்தனர். ஆனால், முடியவில்லை.

மாரடைப்பாக இருக்கலாம் என்று கருதி நெஞ்சுப்பகுதியை அழுத்திப் பார்த்தனர்.அப்படியும் கருணாநிதியிடம் சத்தம் இல்லை. ஊர்வலத்தில் வந்த கார்,ஆட்டோக்களை நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கேட்டனர்போலீசார். அவர்கள் மறுத்து விட்டனர்.

ஜீப் இருந்தும் ஓட்ட முடியாத நிலை. மூர்ச்சையடைந்த கருணாநிதி தான் அதற்குடிரைவர். உதவி கமிஷனர் உள்ளிட்ட யாருக்கும் ஜீப் டிரைவிங் தெரியாது.

அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் சப்இன்ஸ்பெக்டர் தேவராஜ் என்பவர் வந்தார்.நிலைமையை அறிந்து தனக்கு ஜீப் ஓட்டத் தெரியும் என்றதும் ஒட்டுமொத்தபோலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

உடனடியாக தலைமைக் காவலர் கருணாநிதியை, போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தக்க சமயத்தில் கொண்டு வந்து சேர்த்ததால் கருணாநிதி உயிர் பிழைத்தார் என்றுமருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+