ராணுவத்தில் சேர போலி சர்டிபிகேட் கொடுத்தவர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

போலியாக ஆவணங்களைக் கொடுத்து ராணுவத்தில் சேர முயன்ற 7 பேரிடம் ராணுவஅதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி நடந்தது. இந்தப் பணிக்கு அருகில்உள்ள நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டபட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

உடல் தகுதி தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளில் தேர்வு பெற்ற இளைஞர்களின்கல்வித் தகுதி குறித்த சோதனை நடந்தது. அப்போது, போலியான பத்தாம் வகுப்புச்சான்றிதழ் வைத்திருந்த 4 பேரை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.

இதே போன்று போலியாக ஜாதிச் சான்றிதழை வைத்திருந்த ஒருவரையும்ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இவர் இரண்டு ஜாதிகளில் சான்றிதழ் பெற்றுராணுவத்தில் சேர முயற்சி செய்தார். இரண்டு பேர் தவறான சான்றிதழ் கொடுக்கமுயற்சி செய்தனர்.

இந்த 7 பேரிடமும்ம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராணுவ அதிகாரிகள்தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+