மே. இ. தீவுகளை108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
நைரோபி:
மேற்கிந்தியத் தீவுகளுக்கான எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 108 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டித் தொடர் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது.
இப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இலங்கைக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜெயசூர்யாவும் குணவர்தனேவும் களமிறங்கினர்.
அதிரடி ஆட்டம் மூலம் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெயசூர்யா 2 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த அட்டபட்டும் 2 ரன்களில் அவுட்டானார்.
10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தவித்தது. ஆனால் அடுத்து ஆட வந்த துணை கேப்டன் மஹில ஜெயவர்தனேவும், குணவர்தனேவும் நின்று ஆடி ரன்கள் குவித்தனர்.
இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தனர். 72 ரன்கள் எடுத்த நிலையில் ஜெயவர்தனே ஆட்டமிழந்தார். குணவர்தனே 132 ரன்கள் குவித்தார். ரஸ்ஸல் அர்னால்டு தனது பங்குக்கு 41 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மெக்லீன், தில்லான் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது.
இலங்கை பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் ரன் குவிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், தொடர் இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
இதனால் 85 ரன்களுக்கு 6 விதகெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இந் நிலையில், வில்லியம்ஸும் நாகமூட்டும் நின்று ஆடி ரன்கள் குவித்தனர். ஆனால், அவர்களும் நீண்ட நேரம் நிற்கவில்லை. இருப்பினும் இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தனர்.
கடைசியில் 46.4 ஓவரில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் இழந்தது. இதனால், இலங்கை 108 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் முரளிதரன் சிறப்பாக பந்து வீசினார். அவர் 10 ஓவரில் 9 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இதில் 4 ஓவர்கள் மெய்டன்களாகும்.
ஸோய்ஸா 3 விக்கெட்டுகளையும் விக்ரமசிங்கே, ஜெயசூர்யா இருவரும் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சிறப்பாக ஆடி சதமடித்த இலங்கை வீரர் குணவர்தனே ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இத் தோல்வியை அடுத்து போட்டியிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் விலகியது. இலங்கை அடுத்து 8-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.
வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்தும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.
ஸ்கோர்:
இலங்கை - 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள்.
மே.இ. தீவுகள் - 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications