பீதியைக் கொடுக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ்
சென்னை:
மத்திய அமைச்சரச் பொன்னுச்சாமி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பாதிதூரம் சென்ற விமானம் மீண்டும் தரைஇறக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை இரவு டெல்லிபுறப்பட்டுச் சென்றது. வழக்கமாக மாலை 6 மணிக்கு கிளம்பி வேண்டிய விமானம், ால்தமாததமாக 7.15-க்குத்தான் கிளம்பியது.
விமானத்தில் மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி மற்றும் 7எம்.பி.களும் இருந்தனர். விமானம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் சக்கரத்தைஉள்ளே இழுத்துக் கொள்வதில், பிரச்சனை இருப்பதாக விமான நிலையக் கட்டுப்பட்டுஅறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து சேர்ந்தது. விமானத்தில்நிரப்பப்பட்டிருந்த எரி பொருளை தீர்ப்பதற்காக வானில் சிறிது நேரம் சுற்றி விட்டுவிமானம் தரை இறங்கியது.
8 நாட்களில் 3-வது குழப்பம்:
கடந்த 8 நாட்களில் சென்னையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கலில் நடந்துள்ள3-வது குழப்பமாகும் இது என்பது குறிப்பிடத்தகக்கது. சென்ற மாதம் 26-ம் தேதிசிங்கப்பூர் சென்ற இந்சியன் ஏர் லைன்ஸ் விமானம் கடலை நோக்கி தலைகுப்புறகவிழ்ந்து அதன் பின் மேலே சென்று தப்பி தரை இறங்கியது. இதில் 11 பயணிகள்காயமடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில் ஒரு பயணியை விமான நிலையத்திலேயே விட்டுச சென்றுபாதிவழியில் திரும்பி வந்து அந்த பயணியை மீண்டும் ஏற்றிச் சென்றது.
கடந்த 1-ம் தேதி அந்தமான் சென்ற அலையன்ஸ் விமானத்தின் டயர் வெடித்ததாகசந்தேகப்பட்ட விமானி பாதியிலேயே விமானத்தைத் தரையிறக்கினார்.
இப்போது, செவ்வாய்க்கிழமையன்று பழுதடைந்ததால் இறக்கப்பட்ட விமானம், பல்டிஅடித்து பின் அதிர்ஷ்டவசமாக தப்பிய விமானம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் மற்றும் பயணிகள் இரவு 9.55-க்குதனியார் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications