கண்ணகி கோவில் கோரி திருச்செங்கோட்டில் பேரணி
திருச்செங்கோடு:
கண்ணகிக்கு கோட்டம் அல்லது கோயில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோட்டில் நடந்த கண்ணகி விழாவையொட்டி பிரம்மாண்ட பேரணிநடத்தப்பட்டது.
தமிழ் இலக்கியத்தில் நீதி கேட்டுப் போராடிய கண்ணகியைத் தெய்வமாகப் போற்றி திருச்செங்கோட்டில் ஒவ்வொரு ஆண்டும் விழா நடந்து வருகிறது.விசாகப் பெருவிழா சமயத்தில் நடக்கும் இவ்விழா, இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடந்தது.
வன்னிய சமூகத்தின் வழித் தோன்றலாகவே கண்ணகியும், கோவலனும் தோன்றினர் எனக் கூறி, வன்னிய சமூகத்தினர் இவ்விழாவிற்கானஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
திருச்சங்கோட்டில் கண்ணகிக்கு கோயில் அல்லது கோட்டம் அமைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை நீண்ட நாட்களாக வன்னியர் சமூகத்தினர்வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு சார்பில், கண்ணகிக் கோட்டம் அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கென 22 கோடி ரூபாயும் 24ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.
இந்தப் பணியை விரைவாகத் துவங்கக் கோரி கண்ணகி விழாவையொட்டி பேரணியும், கோரிக்கை மாநாடும் நடந்தது. பேரணி முடிவில், ஆர்.டி.ஓ.,விடம்விழாப் பிரதிநிதிகள் மனுக் கொடுத்தனர். இதன் நகலை முதல்வர் கருணாநிதிக்கும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்குடிமகனுக்கும் அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications