கோவையில் விரைவில் உள் விளையாட்டு அரங்கம்
கோவை:
கோவையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஓராண்டாக பணிகள் நடைபெறாமல்இருந்த உள்ளரங்க விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்கப்படும். இதற்கானஇடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் உறுப்பினர் செயலர் நிரஞ்சன் மார்டி தெரிவித்தார்.
கோவையில் நேரு மைதானத்தில் உள்ள சுற்றுப்பாதையில் வடிகால் அமைக்கும் பணிநடந்து வருகிறது. இந்தப் பணியை தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின்உறுப்பினர் செயலர் நிஞ்சன் மார்டின் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், கோவையில் உள்ள நேரு விளையாட்டுமைதானத்தில் வடிகால் அமைக்குப் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி விரைவில்முடிவடையும். இந்த மைதானத்தில் சின்தெடிக் ஓடுகளம் அமைக்கத் தேவையானநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், இந்த நேரு ஸ்டேடியத்திற்குள் உள்ள கடைகளுக்கு குறைந்த அளவுவாடகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகையை உயர்த்த கடைநடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும்வருவாய், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
கோவையில் உள்ளரங்க விளையாட்டு மைதானம் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்குமுன்பே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் உள்ளரங்கவிளையாட்டு மைதானம் அமைக்கத் தேவையான இடம் தேர்வு செய்யப்படுவதில்சிக்கல் ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டது.
ஆர். எஸ். புரத்தில் தற்போது உழவர் சந்தை அமைந்துள்ள இடம் மற்றும் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள மாணவர் விடுதிக்குச் சொந்தமான இடத்தை மாநகராட்சிஅளிக்க மறுத்து விட்டது.
தற்போது ராம் நகரில் உள்ள சுவர்ணம்பிகா லே அவுட்டில் இடம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இதில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications