இந்தியாவின் உற்ற தோழன் ரஷ்யா .. கே.ஆர். நாராயணன் புகழாரம்
டெல்லி:
இந்தியாவின் சிறந்த நண்பன் ரஷ்யா. அதன் அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவின்மிகச் சிறந்த நண்பர் என்று இந்திய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டவரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உலக வல்லரசு நாடாகத் திகழும் ரஷ்யா, இந்தியா மீது அக்கறை கொண்டுள்ளது.இந்தியாவின் நலனிலும், இந்தியாவின் செயல்பாட்டிலும் அதிக ஈடுபாடு காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும், ரஷ்யாவும் பல ஆண்டுகளாக நட்புறவுடன் பழகி வருகின்றன. அந்தநட்புறவின் அடையாளமாகவே புடின் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என்று ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளன. கடந்த ஆண்டுகளைப் போலவே வரும் ஆண்டுகளிலும் இருநாடுகளும் அனைத்து விஷயங்களிலும் இணைந்தே செயல்படும் என்பது உறுதி.
ஐக்கிய நாடுகள் சபையை மாற்றி அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்காக ரஷ்யாவுக்கு நன்றி செலுத்த இந்தியாகடமைப்பட்டுள்ளது என்றார் நாராயணன்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications